Friday, October 28, 2016

ரம்பம் ரம்பம்ரம்பம் ஆ ... ரம்பம்

வணக்கம்

இது எனது முதல் முயற்சி ... என்று சொல்ல மாட்டேன் ஏற்கனவே வேறு ஒரு தளத்தில்  எழுத ஆரம்பித்து பின்னர்  கணினி பழுது அடைந்ததாலும் நேரம் இன்மையாலும் நிறுத்தி விட்டேன்

ஆனாலும் மற்றவர்கள் எழுதும் பொழுது நாமும் எழ்துவோம் என்று மறுபடியும்  ஆறாம்பித்துஉள்ளேன்

தமிழ் பேசுவதே தகராறு இதில் எழுதுவது என்பது மிக பெரிய நகைச்சுவை ஆனாலும் விக்ரமாதித்யன் (பழைய சந்தமாமா புத்தகத்தில் வருமே ) போல தன்  முயற்சியை விடாது , தொடர்கிறேன்

நிறைய தவறுகள் இருக்கலாம் சொல் குற்றம் இருக்கலாம் அது எல்லாம் நக்கீரன் தருமிக்கு சொன்னது போல் மன்னித்து விடுங்கள்

 பொருள் குற்றம் இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்த முயற்சிக்கின்றேன்

இது வரையில் என்ன எழுதுவது என்று முடிவாகவில்லை கேபிள் சங்கர் ,ஜாக்கி சேகர் , இட்லிவடை ,ரயில்வே செந்தில்  அல்லது கருந்தேள் ராஜேஷ் (இது கொஞ்சம் ஓவர் தான் ) இவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் எதோ ஒன்று எழுதுவோமே. கண்டிப்பாக இலக்கியம் , கவிதை  இருக்காது. பின்னே வேறு என்னத்த எழுத  ?

பார்த்த படங்கள் போன இடங்கள்  மனிதர்கள் , சிந்தனைகள்  !

தீபாவளிக்கு பிறகு எழுதுவோம்  என்று இருக்கிறேன்

அது வரைக்கும் பத்திரமாக  தீபாவளி கொண்டாடுங்கள்  கொடி , காஷ்மோரா படம் பாருங்கள் ....

நான் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக திரைக்கு வந்த சில நாட்கள்  ஆனா புத்தம் புதிய தமிழ் தெலுகு படங்கள் மற்றும் ஆங்கிலச் தொடர்கள் பார்க்க போகிறேன்